Web Page Hit Counter
Crucial Computer Memory

Wednesday, December 10, 2008

சிகரங்களை நோக்கி...

வணக்கம்,
சிலரோட புக்ஸ் படிக்கிறப்ப ரொம்ப எதார்த்தமா இருக்கும். சிலரோடது கற்பனை தனமா இருக்கும். சிலரோடது சயிண்டிபிக்கா இருக்கும். சிலது ஆன்மீகமா இருக்கும். இதுதான் ஒவ்வொருத்தரோட ரசனைக்குரிய எழுத்தாளர் இவர்னு சட்டுன்னு அடையாளம் காட்டிரும். எனக்கு புடிச்ச எழுத்தாளர் வைரமுத்து சார்தான். நான் படிச்சமுதல் புக் சிகரங்களை நோக்கி. இன்னைக்கு வரைக்கும் பல பக்கங்கள் அப்டியே மூளைலஓடிகிட்டு இருக்கு. ஒரு கவிதைதனமா வாழ்கைய வாழணும்னு நினைக்கிற ஒரு சராசரி பயனுக்கும், எல்லாத்தயுமே அனுபவ பூர்வமா எடுத்துக்கிற பொன்னுக்கும், சமூகத்துல மனுசனோட ஆறாவது அறிவால நாம இழந்தத பத்தியும் அவரோட நடைல பக்காவா எழுதி இருப்பாரு. ஓர்சின்ன சாம்பிள்.
" மனசு கனத்தால் சிலர் டைரி எழுதுவார்கள். சிலர் கண்ணீர் விடுவார்கள். அவன் இரண்டும் செய்தான், டைரி நனைந்தது ". ஒரு தடவ டைம் கிடச்சா படிச்சு பாத்துட்டு சொல்லுங்க .....